top of page

நேரம் ஓடும், உலகம் மாறும், 

நிலவை மாற்றும் சூரியன் 

இந்த உலக வாழ்வு கடந்து போகும்,

ஒரு நிழல் போல மறைந்து போகும் - 2

காத்திருக்கிறன் உம் வருகைக்காகவே

உம் ராஜ்ஜியத்தை அடையும்வரை காத்திருக்கிறன் - 2

 

1. கண்மூடி நடந்தேன் தடுமாறி விழுந்தேன்

   உம் கரம் பிடித்து நடத்தினீரே

   கடல் போன்ற சோதனை என் முன்னே வந்தாலும்

   உம் வார்த்தை கொண்டு தேற்றினீரே -2

            சோதனை வந்தாலும் அஞ்ச வேண்டாம்

            கர்த்தர் நம்மோடு என்றும் இருப்பார்

            மரணத்தின் விளிம்பில் நின்றால் கூட

            நித்திய ஜீவ வாசல் திறப்பார் - 2

 

காத்திருக்கிறன் உம் வருகைக்காகவே

உம் ராஜ்ஜியத்தை அடையும்வரை காத்திருக்கிறன் - 2

 

2. மனித பாவம் போக்க மனிதனானீர் இயேசுவே

   ரத்தத்தால் கழுவி  உம் பிள்ளையாக மாற்றினீர்

   மரணமே உன் கூர் எங்கே

   பாதாளமே உன் ஜெயம் எங்கே -2

            இயேசு கிறிஸ்து, பாவத்தை சுமந்தார்

            சிலுவையில் மரித்தாரே

            மரணத்தை வென்றவர், உயிர்த்தெழுந்தார்

            அவர் நாமம் மேலானதே -2

 

காத்திருக்கிறன் உம் வருகைக்காகவே

உம் ராஜ்ஜியத்தை அடையும்வரை காத்திருக்கிறன் - 2

 

நேரம் ஓடும், உலகம் மாறும், 

நிலவை மாற்றும் சூரியன் 

இந்த உலக வாழ்வு கடந்து போகும்,

ஒரு நிழல் போல மறைந்து போகும் - 2

 

காத்திருக்கிறன் உம் வருகைக்காகவே

உம் ராஜ்ஜியத்தை அடையும்வரை காத்திருக்கிறன் - 2

bottom of page